Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»சிறப்புப் பக்கம்»சிறப்பு கட்டுரைகள்»வரலாற்றை நினைவு கூர்வோம்!
    சிறப்பு கட்டுரைகள்

    வரலாற்றை நினைவு கூர்வோம்!

    Sridhar KannanBy Sridhar KannanJanuary 1, 2018No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    30000 பேர் கொண்ட ஜாதி வெறி் “பேஷ்வா” படையை வெறும் 500 பேர் கொண்ட மகர் போர்ப்படை வீரர்கள் 12 மணி நேரத்திற்குள் வீழ்த்தி வெற்றிகொண்ட நாள் இன்று.

    பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமே இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறு’ என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். பார்ப்பனியத்திற்கு எதிரான போரில், 200ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தகுந்த வெற்றி ஈட்டப்பட்ட நாள் சனவரி 1.

    மிகுந்த வியப்புக்குரிய இந்நாள் குறித்த வரலாற்றுத் தகவல்களை பர்தீப் சிங் ஆட்ரி பதிவு செய்திருக்கிறார் : “1.1.1818 அன்று 500 பேர் மட்டுமே கொண்ட தீண்டத்தகாத போர்வீரர்கள் (மகர் ரெஜிமன்ட்) எண்ணிக்கையில் பலம் பொருந்திய 30 ஆயிரம் போர்வீரர்கள் அடங்கிய பேஷ்வா ராணுவத்தினரை முறியடித்தனர். மகாராட்டிர மாநிலத்தில் உள்ள பூனாவில் பார்ப்பன பேஷ்வா ஆட்சியாளர்கள் மிகக் கொடூரமான ஆட்சியை நடத்தி வந்தனர். இதை எதிர்த்து பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த மகர் ரெஜிமன்ட் வீரர்கள், ஒரே நாளில் பேஷ்வாக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர். இப்போருக்கு இணையான ஒன்றை வரலாற்றில் குறிப்பிட முடியாது.

    தீண்டத்தகாத போர்வீரர்களால் நடத்தப்பட்ட இப்போர், சுயமரியாதைக்கும் மனித மாண்புக்குமானது; மநுஸ்மிருதியின் மேலாதிக்கத்திற்கு எதிரானது! பார்ப்பன ஆட்சியின் கீழிருந்த மகாராட்டிராவில் சாதி அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் கடுமையாக இருந்தன. இவர்களின் ஆட்சியில்தான் தீண்டத்தகாத மக்கள் தங்கள் இடுப்பில் துடைப்பத்தைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். இம்மக்களுக்கு கல்வி முற்றாக மறுக்கப்பட்டிருந்தது. கல்வி கற்க முனையும் தீண்டத்தகாத மக்கள் கொல்லப்பட்டனர்.

    பீம கோரெகான் போர்தான் இந்த அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போர் கோரோகானில் உள்ள பீமா ஆற்றங்கரையின் ஓரத்தில் நடைபெற்றது. பேஷ்வா ராணுவத்தினர் 20 ஆயிரம் குதிரைப் படையினர் மற்றும் 8 ஆயிரம் காலாட் படையினருடன் தயாராக இருந்தனர். 12 மணி நேரத்தில் தீண்டத்தகாத போர் வீரர்கள் அவர்களை வெற்றி கொண்டனர். 1851 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இப்போரில் மடிந்த 22 மகர் வீரர்களின் நினைவாக ஒரு தூணை எழுப்பியது. பாபாசாகேப் அம்பேத்கர் ஒவ்வொரு ஆண்டும் கோரெகானுக்குச் சென்று இந்நினைவுத் தூணுக்கு வீரவணக்கம் செலுத்துவார். 1.1.1927 அன்று இவ்விடத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை அவர் கூட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.”

    – தலித்முரசு, சனவரி 2010

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous ArticleFive must visit places to rediscover the life of Dr Babasaheb Ambedkar
    Next Article தலித்துகள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறி தாக்குதல்
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்

    February 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • சாதி ஒழிப்பு (Annihilation of Caste)
    • 1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    Random Posts

    இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறுமா?

    October 10, 2023

    சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா

    April 25, 2016

    ஜெ.ஜெ. தாஸ்

    June 13, 2016

    The philatelic lives of Dr. Ambedkar

    April 18, 2021
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.